என் இதயத்துக்குள்
இன்னொரு இதயம்
சுகமாய் வீழ்ந்த
அந்த நொடிப் பொழுது
அவன் சுவாசம்
எனைத் தீண்ட
என் மனது காதலை
பூத்த அந்த நாழிகை
அவன் பார்வைகளால்
என் இதயத்துக்குள்
சித்திரம் வரைந்த
அந்த மணித்துளிகள்
அவன் நினைவுகள்
என் மனதுக்குள்
இறங்கிய தருணங்கள்
இவை எல்லாவற்றையும்
நினைத்திடும் பொழுது
அவன் நினைவுகள்
உயிர் பெற்று
என் பொழுதுகளை
அவிய வைத்து பசியாறிக்
கொள்கின்றது இரக்கமின்றி..
அவன் நினைவுகள்
என் இதயத்தை
தீண்டி விடாமல் வேலி
போடுகின்றேன் இருந்தும்
அவன் நினைவுகள்
இதயத்தை தாண்டி
என்னை முழுவதும்
ஆக்கிரமித்து படர்கின்றதே
ஒரு வேளை அவன் நினைவுகள்
பாதீனியம் போலவோ?
நான் அழிக்க அழிக்க
மீண்டும் முளைக்கின்றதே
என் காதல் தேசத்தில்
நான் மட்டும் தனியாக
அவன் நினைவுகளை
தினம் தினம் சுமந்து
காதல் அகதியாக வாழ்கிறேன் ...















