உன் காதல் வேண்டாம் பெண்ணே...

Svr.pamini

பெண் ;

உன்னைப்பார்த்த சில நொடியில்
என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா
மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட
ஏனோ என் கண்கள் துடிக்குதே
காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று
என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே

என் உணர்வினில் கலந்து உயிரினில் மிதந்து
நினைவினில் துளிர்த்து என் காதலில் பிறந்தவனே
என் காதல் புரியவில்லையா?
அறிந்தும் அறியாதவனே
புரிந்தும் புரியாதவனே
புலம்புகின்றேன் புரியவில்லையா?
எந்தன் காதல் உனக்கு தெரியவில்லையா?

ஆண் ;
அறிந்தேன் பெண்ணே அறிந்தேன்
புரிந்தேன் கண்ணே புரிந்தேன்
புலம்ப வேண்டாம் பெண்ணே
உந்தன் காதல் வேண்டாம் கண்ணே
வரும் காலம் யாவும்
கண்ணீர் துளிகள் வரவாகுமே
துன்பங்கள் தொடராகுமே
இன்பங்கள் தொலைவாகுமே
உன் காதல் சில நாளில்
தேய் பிறையாகி போகுமே
என் காதலும் வேண்டாம் பெண்ணே
உன் காதலும் வேண்டாம் கண்ணே...

Photobucket

svr.pamini

by svrpamini:

Free Blog Templates