உன் குரல்

svr.pamini



முதல் முறை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்! என்னை மறந்து
உன் குரலில் தொலைந்தே போனேன்..!
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள்

என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..!
உன் குரல் மட்டும் கேட்காமல் போய் இருந்தால்
என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா!
வர்ணிக்க வார்தைகள் தேடி அலையும் பேதை நானடா.!
உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்!
விடுதலை பெற விருப்பமில்லாமல்..
உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக
வாழ அடம் பிடிக்கிறது...!

என் உறவென உனை மாற்றினாய்!
விழி வழியே உன் உருவம் நகல் எடுத்தது
நித்தமும் பார்க்க வைத்தாய்.!
என் இனியவனே உன்னிடம் அடிமைப்பட்டு
வாழ்ந்திட ஏங்குது.. இந்த பெண்ணின் மனம்.......!
Photobucket

svr.pamini

by svrpamini:

Free Blog Templates