தெருவோரத்தில் நான்..

svr.pamini

உலகம் புரியா சின்ன ரோஜா ஒன்று
வாழ்க்கை முள் நிறைந்த பாதை என்று தெரியாமல்
கோடி "கனவுகள் " ஏராளம் மனதில் வளர்த்து விட்டு
உன் வார்த்தைகள் கேட்டு அந்த பூவையின் "கனவுகள்"
ஒவ்வொரு இதழாக மண்ணில் உதிர்ந்து வீழ்ந்தது இன்று ..!

என் உணர்வுகளுக்கும் ஆசைகளுக்கும் விதையிட்டு
முளையாகி மரமாக வளரவிட்டவன் நீ
ஆனால் அதை இப்போது வெட்டி சாய்த்து விட்டாய்
வார்த்தை என்னும் ஆயுதத்தால்

நான் எத்தனையோ எதிர்பார்புக்களை சுமந்தேன்
ஒற்றை மரமான இவள் தோப்பாக மாறி பூமியிலே
வாழ வேண்டும் என்று எந்தனையோ கனவுகள்..
ஆனால் இன்று பட்ட மரமாக தெருவோரத்தில் நான் ...

svr.pamini

by svrpamini:

Free Blog Templates