எண்ண அலைகள் ....!


நீ வந்த வேளை என் வாழ்வில்
சந்தோசங்கள் கூத்தாடின
நீ போன வேளை பிரிவின் வேதனைகள்
இதயத்தில் கனக்கின்றது..!
உன்னை வழியனுப்பி விட்டு நடக்கின்றேன்
கால்கள் நடக்க மறுக்கின்றது..!
கண்களால் நாற் திசையும் பார்க்கிறேன்
எல்லாமே வெறுமையாக இருப்பதை
போல் உணர்கின்றேன்..!

நீ என் அருகில் இருக்கும் போது அழகாக
தோன்றிய பொருடகள் எல்லாம்
நீ இல்லாத வேளையில் அழகற்றதாய்
தோன்றுகின்றது ..!

அடி மனதில் இருந்து பிரிவின் வேதனை
கண்ணீராக கண்களின் வழியே வழிகின்றது ..!
ஆனாலும் உந்தன் நினைவுகள்
மயிலறகாக வருடுவதால்
சற்றேனும் என் இதயத்துக்கு
ஆறுதலாக இருக்கின்றது..!

நீ என்னை விட்டுத்தான் பிரிந்து சென்றாய்
உள்ளத்தால் அல்ல ஆனாலும்
இந்த பிரிவு கூட சுகம்தானடா ..!
உன்னை பற்றிய எண்ண அலைகள்
இன்னும் கூடுதலாக பெருக்ககெடுப்பதால்..!
Svr.pamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates