என் துன்பத்தில் இன்பமாக மலர்ந்தவனே
சோகங்கள் என்னை கோடி கோடியாக துளைத்தாலும்
என் இதயத்தை அம்பு கொண்டு தகர்த்தாலும்
எனக்காக நீ இருக்கின்றாய் என்று எத்தனை துன்பங்கள் வரினும்
அத்தனையும் சுகமாக ஏற்றுக்கொள்வேன்
உன்னோடு வாழும் அந்த அழகிய நாட்களை எண்ணியபடி
என் சோகங்களை மூட்டைகட்டி தூக்கி எறிந்துவிட்டு
என்றும் இவள் உந்தன் இவளாக
வாழ்க்கை பாதையில் பயணிக்கின்றேன் நான்
உன் அன்பை பார்த்து வியக்கின்றேன் நானடா
உன் அன்பு வரம் வேண்டி தினம் தினம்
உன் பக்தையாக நான் என் தெய்வமாக நீ