கண்ணிமைக்காமல் உன்னை பார்த்து கொண்டு இருந்தேன்
என்ன அதிசயம் உன் விழிகளின் வழியே
என் விழிகளை நோக்கி உன் பார்வைக்கணைகள்
என்னை நோக்கி வரும் போது இனம் புரியாத ஏதோ ஒன்று
என் விழிகளுக்குள் வீழ்ந்து இன்பமாக தாக்கியது.
ஆனாலும் அந்த இம்சையான இன்பம் சில நொடிகள் தான்
உன் வார்த்தை அம்புகள் என்னை நோக்கி தாக்குகின்றது.
என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க துடித்தாலும்
உனக்கு அழுவது பிடிக்காது என்ற காரணத்துக்காக
என் கண்ணீரை கண்களுக்குள்ளேயே சிறை வைத்துக்கொள்கிறேன்.
ஆனாலும் இப்போது நீ என்னருகில் இருக்கும் ஒன்றே
எனக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத சொத்தாக
என் பார்வைகளில் உன்னை சேமிக்கிறேன்
என் பார்வைக்குள் நீ