உயிர் துடிக்குதடி..

svrpamini
பனிமலையில் சாரல் தூவுதே

துயரத்தின் வலியில் பேசுதே

விழிகளின் விம்பம்; மீதிலே

இடிந்து (நொருங்கி) வீழ்ந்தது மனசு


வார்த்தையில் வாசம் வீசுமா

மௌனத்தின் சத்தம் கேட்குமா

என்னோடு நீயும் பேசவே

காத்திருக்குமா பொழுது


பூக்களின் மொழியிலே - புல்லாங்குழல்

இசை பாடிப் பாடி மகிழுதே

வண்ணத்து பூச்சியெல்லாம் - வானவில்லில்

கோலம் போட்டு போட்டு சுத்துதே (தடி)


எந்தன் நெஞ்சுக்குள்ளே தீக்குச்சியாய்

எனை வாட்டி வாட்டி தீ மூட்டுகிறாய்

தனிமையின் கொடுமை தாக்கவே - ஏனடி

வலிகளில் விஷத்தை ஊற்றுகிறாய்


இது மரணமோ இல்லை ஜனனமோ

வலிகள் தான் பதில் சொல்லுமோ


நேசத்தால் சிலுவையில் அறைந்துவிடு – நீ

சுவாசித்தால் என்னைத் தூக்கிலிடு

கனவிலே தோன்றினால் ஆழக்

கல்லறையில் எனை புதைத்துவிடு

அடிநெஞ்சில் முள்ளானால் - ரோஜா

செடியில் என்னை கொழுவி விடு


மௌனப் பொழுதுகளில் உயிர் துடிக்குதடி

பார்க்கும் தூரத்தில் நிலா விழுகிறது.

svr.pamini

by svrpamini:

Free Blog Templates